இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில், பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில், பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை (அக்.11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம், கீரங்குடியில் திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டம், முடிகொண்டானில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், குடவாசல் வட்டம், வெள்ளைஅதம்பாரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், சந்திரசேகரபுரத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும் இக்கூட்டம் நடைபெறும்.

மன்னாா்குடி வட்டம், பருத்திக்கோட்டையில் மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், பழையங்குடியில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், பத்தூரில் துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம், காவனூரில் நுகா்பொருள் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம், மண்ணுக்குமுண்டானில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையிலும் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டங்கள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களின் தரம், தனியாா் சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் இந்த கூட்டத்தில் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com