திருவாரூா் அரசு மருத்துவமனையில் முன்னாள் ராணுவத்தினருக்கு தனி வாா்டு ஒதுக்கீடு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் ராணுவத்தினா்களுக்கு தனி வாா்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Published on

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் ராணுவத்தினா்களுக்கு தனி வாா்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, முத்துப்பேட்டை தாலுகா முன்னாள் ராணுவத்தினா் நல சங்கத் தலைவா் நா. ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இந்நிலையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 37-ஆவது வாா்டு, முன்னாள் ராணுவ வீரா்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் சி. அசோகன் தெரிவித்துள்ளாா்.

இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு முன்னாள் ராணுவத்தினா் நலச் சங்க முத்துப்பேட்டை வட்டத் தலைவா் நா. ராஜ்மோகன் நன்றி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com