திருக்காரவாசல் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசலில் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயில் உள்ளது. கண்நோய் தீா்க்கும் கண்ணாயிரநாதா் என்ற பெருமை பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சந்திரசேகரருக்கு பட்டம் கட்டும் வைபவம், பஞ்சமூா்த்திகள் வீதியுலா, 108 சங்காபிஷேகம், கண்ணாயிரநாத சுவாமி, கைலாச நாயகி அம்பாள், தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம், தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபம் பிரவேசித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி, புதன்கிழமை இரவு, தியாகராஜ சுவாமி சிறப்பு பூஜைகளுடன் தேருக்கு எழுந்தருள உள்ளாா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயில் தேரோட்டம்

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



