சாந்தினி செளக்கில் தீ விபத்து

சாந்தினி செளக் பகுதியில் குருத்வாரா சிஸ்கஞ்சுக்கு பின்னே உள்ள 3 மாடி கட்டடத்தில் புதன்கிழமை நண்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.
Published on
Updated on
1 min read

சாந்தினி செளக் பகுதியில் குருத்வாரா சிஸ்கஞ்சுக்கு பின்னே உள்ள 3 மாடி கட்டடத்தில் புதன்கிழமை நண்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக நண்பகல் ஒரு மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்புப் படையினர், கட்டடம் முழுவதுமாக பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம், உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com