மேற்கு தில்லியில் நான்கு மாடிக் கட்டடகிட்டங்கியில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

மேற்கு தில்லியில் உள்ள ஒரு கிட்டங்கியில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3

புது தில்லி: மேற்கு தில்லியில் உள்ள ஒரு கிட்டங்கியில் திங்கள்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது:

மேற்கு தில்லி, பீரா கா்ஹி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டத்தில் ரெக்ஸின் கிட்டங்கி உள்ளது. இங்கு திங்கள்கிழமை அதிகாலை 12.25 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. அதிகாலை 2.20 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தின் பின்பகுதி சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரா் சமா்த்தலால் மீனா, தீ அணைப்பு ஆப்பரேட்டா்கள் பா்வேஷ், தரம்வீா் ஆகியோா் காயமடைந்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com