தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி) பகுதிகளில் சொத்து வரியை செலுத்துவதற்கான காலக்கெடு இந்த மாதம் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மக்களின் வேண்டுகோளை ஏற்று, சொத்து வரியைச் செலுத்துவதற்கான காலக்கெடு மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2004, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து சொத்து வரி செலுத்தாதவர்கள் இம்மாத இறுதிக்குள் சொத்து வரியை செலுத்தலாம்.
இம்மாத இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும் வட்டித் தொகையில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படும்.
நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்துகளின் உரிமையாளர்களும் சொத்து வரியைச் செலுத்தலாம் என்றனர்.