மயூர்விஹார் ஃபேஸ் 1-இல் மூன்று நாள்: சங்கீத ராக மகோத்ஸவம் இசை நிகழ்ச்சி: செப்.21-இல் தொடக்கம்

நாதபிரம்மம் யுனைடெட் ஞான் அகாதெமி சார்பில் சங்கீத ராக மகோத்ஸவம் தில்லியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 23 வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.

நாதபிரம்மம் யுனைடெட் ஞான் அகாதெமி சார்பில் சங்கீத ராக மகோத்ஸவம் தில்லியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 23 வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.
மயூர் விஹார் ஃபேஸ் 1-இல் அமைந்துள்ள ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் கோயில் வளாகத்தில் இவ்விழா நடைபெறுகிறது. முதல் நாளான செப்டம்பர் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு டாக்டர் ஸ்ரீதர் வாசுதேவன் மற்றும் ஹம்சினி குழுவினர் வழங்கும் பரத நாட்டியம், செப்.22-ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு சாய் சகோதரிகள் வழங்கும் பரத நாட்டியம், மாலை 6.45 மணிக்கு சிக்கில் சி.குருச்சரண் குழுவினர் வழங்கும் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெறும்.
நிறைவுநாளான செப். 23-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு சாத்வி சுந்தரேசன் வழங்கும் பரத நாட்டியம், மாலை 5.30 மணிக்கு ஆர்த்திய ஐயங்கார் வழங்கும் பரதநாட்டியம், மாலை 6.45 மணிக்கு டாக்டர் கே. கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கும் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாதபிரம்மம் யுனைடெட் ஞான் அகாதெமி அமைப்பினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com