தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் பொதுச் செயலர் இறா. முகுந்தன், இணைச் செயலர் பாலமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.மகேந்திரன், முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், முன்னாள் இணைச் செயலர் சத்யா அசோகன், கர்நாடக சங்கீத சபா செயலாளர் ஆர்.மகாதேவன், தமிழ்நாடு இல்ல அலுவலர் தெய்வசிகாமணி ஆகியோர் அண்ணாவின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அண்ணாவின் பெருமைகளையும், சிறப்புகளையும் நினைவு கூர்ந்தனர்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள், தில்லிவாழ் தமிழ் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.