ரசிகப்பிரியா அமைப்பின் ஆண்டு விழா

தில்லியில் உள்ள ரசிகப்பிரியா அமைப்பின் 17-ஆவது ஆண்டு விழா ரோஹிணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தில்லியில் உள்ள ரசிகப்பிரியா அமைப்பின் 17-ஆவது ஆண்டு விழா ரோஹிணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் வடக்கு தில்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் பிரீத்தி அகர்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 
ஆஸ்திக சமாஜின் தலைவர் டி.என். சிவராமகிருஷ்ணன், மவுண்ட் அபு பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜோதி அரோரா, தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரசிகப்ரியாவின் அமைப்புச் செயலாளர் ஜெயப் பிரகாஷின் சேவையைப் பாராட்டி முன்னாள் மேயர் ப்ரீத்தி அகர்வால் சான்றிதழ் அளித்தார் . 
விழாவையொட்டி, குருவாயூர் டிவி. மணிகண்டனின் மாணவர்கள் பங்கேற்ற கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர். ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com