"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது' என்று தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இதுபோன்ற இக்கட்டான நிலையில், நாடே ஒன்றுசேர்ந்து நிலைமையைச் சீர் செய்ய வேண்டும். பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்ய மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தில்லி அரசு துணை நிற்கும். பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனினும், அதிக அளவில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
வாகனம், ஜவுளி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகள் கடுமையான சரிவடைந்துள்ளது முக்கியப் பிரச்சனையாகும் என்றார்.