கோகுலாஷ்டமி: பிரதமர் வாழ்த்து

கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 


கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 
கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகை வட மாநிலங்களில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!  என்று தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அபுதாபி சென்றுள்ள மோடி, அங்கிருந்து சுட்டுரை மூலமாக அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com