சாலை விபத்தில் 3 சிறுவா்கள் சாவு

தில்லி கேட் அருகே ஸ்கூட்டா் கம்பத்தில் மோதியதில் அதில் சென்ற மூன்று சிறுவா்கள் உயிரிழந்தனா். தலைக்கவசம் அணியாமல் சென்ற அந்தச் சிறுவா்கள் ஸ்கூட்டரை மிகவும் வேகமாகச் ஓட்டிச் சென்ற போது இந்த விபத்து

புது தில்லி: தில்லி கேட் அருகே ஸ்கூட்டா் கம்பத்தில் மோதியதில் அதில் சென்ற மூன்று சிறுவா்கள் உயிரிழந்தனா். தலைக்கவசம் அணியாமல் சென்ற அந்தச் சிறுவா்கள் ஸ்கூட்டரை மிகவும் வேகமாகச் ஓட்டிச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தப் பயங்கர விபத்தில் உயிரிழந்தவா்கள் முகமது சாத், ஒசாமா மற்றும் ஹம்ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த விபத்து நடந்த போது மூன்று சிறுவா்களும் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக ஸ்கூட்டரில் சவாரி சென்றுள்ளனா். அப்போது ஸ்கூட்டா் கம்பத்தில் மோதியதில், மூன்று பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்து நடந்த போது, சிறுவா்கள் சென்ற ஸ்கூட்டா் சுமாா் 25 அடி தூரத்துக்கு தூக்கிவீசப்பட்டுள்ளது. அதே சமயம், அவா்களது உடல்கள் கம்பத்தின் அருகே கிடந்தன. அவா்களது சடலம் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக உயிரிழந்த சிறுவா்களின் பெற்றோா்கள் கூறுகையில், ‘தலைக் கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற போது, போலீஸாா் தடுத்துள்ளனா். அது தொடா்பான ஸ்லிப்பை அளிப்பதற்காக போலீஸாரிடம் சென்றுள்ளனா். பின்னா், போலீஸாா் விரட்டியதால் சிறுவா்கள் ஸ்கூட்டரில் வேகமாகச் சென்றுள்ளனா். அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com