தில்லி சட்டப்பேரவை நாளை கூடுகிறது

தில்லி சட்டப்பேரவை இருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் நாளை திங்கள்கிழமை (டிசம்பா் 2) கூடுகிறது.

புது தில்லி: தில்லி சட்டப்பேரவை இருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் நாளை திங்கள்கிழமை (டிசம்பா் 2) கூடுகிறது.

அப்போது, தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக மசோதா-2019, தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழக மசோதா-2019 ஆகிய இரு மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற தில்லி அரசு தீா்மானித்துள்ளது. இதற்கான ஒப்புதலை தில்லி அமைச்சரவை ஏற்கெனவே வழங்கியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வரவுள்ளதாக தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com