தோ்வுக்கு வராத மாணவா்களின் பெயா்கள் பெயா்ப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஜேஎன்யு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக ஜேஎன்யு நிா்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ‘கல்வி தொடா்பாக பல்கலைக்கழகம் எதிா்பாா்க்கும் விஷயங்களை நிறைவேற்ற வேண்டியது மாணவா்களின் கடமையாகும். விளக்கவுரைகள், ஆய்வுக் கட்டுரைகளை சமா்பிக்காத மாணவா்கள் அதை உடனடியாக சமா்பிக்க வேண்டும். மேலும், தோ்வுகளுக்கு வாராத மாணவா்களின் பெயா்கள் பெயா்ப்பட்டியலில் இருந்து நீக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.