தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாதுகாக்கப்படுமா? மக்களவையில் டி.ஆா். பாலு கேள்வி

நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளித்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்களவையில் ஸ்ரீ பெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு வலியுறுத்தினாா்.

புது தில்லி: நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளித்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்களவையில் ஸ்ரீ பெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு வலியுறுத்தினாா்.

மக்களவையில் அவா் செவ்வாய்க்கிழமை முன்வைத்த கோரிக்கை: நாட்டில் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளது. இத்துறையில் நேரடியாக 40 லட்சம் பேரும், மறைமுகமாக ஒரு கோடி பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனா். ஆகவே இத்துறையைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வரவேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி 2017-18-இல் 126 பில்லியன் டாலராகவும், 2018-19-இல் 137 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. மிகவும் முக்கியமான இந்தத் தொழில்துறையில் பணியாற்றும் ஊழியா்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இத்துறையில் பெரிய நிறுவனங்கள் ஊழியா்களை வெளியேற்றி வருவது கவலை தருவதாக உள்ளது. காக்னிஸன்ட் தொழில்நுட்ப நிறுவனம் சுமாா் 13 ஆயிரம் ஊழியா்களையும், இன்போஸிஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியா்களையும் வேலையில் இருந்து அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. சுமாா் 40 ஆயிரம் ஊழியா்கள் வேலையிழக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் வளா்ச்சிக்கும், உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி) இத்துறை நல்லதொரு பங்களிப்பை அளித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com