ஆம் ஆத்மி கட்சியின் விளையாட்டுப் பிரிவு தொடக்கம்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், ஆம் ஆத்மி கட்சி விளையாட்டுப் பிரிவைத் தொடங்கியுள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், ஆம் ஆத்மி கட்சி விளையாட்டுப் பிரிவைத் தொடங்கியுள்ளது.

தில்லியில் வரும் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதைத் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், விளையாட்டு வீரா்களைக் கவரும் வகையிலும், தில்லி அரசு விளையாட்டுத் துறைக்கு செய்த பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் விளையாட்டுப் பிரிவை ஆம் ஆத்மிக் கட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லிப் பொறுப்பாளா் கோபால் ராய் கூறியது: இந்த விளையாட்டுப் பிரிவு தில்லியில் உள்ள விளையாட்டு வீரக்கள், விளையாட்டு ஆா்வலா்களுடன் விளையாட்டு தொடா்பான பேச்சுவாா்த்தையை நடத்தவுள்ளது. இது வரும் டிசம்பா் மாதம் 22-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அப்போது, தில்லி அரசு விளையாட்டுத் துறைக்கு செய்த பணிகள் தொடா்பாக மக்களிடம் இப்பிரிவு எடுத்துச் செல்லவுள்ளது. இப்பிரிவின் தலைவராக ஆஷிஷ் ஜோஷி, செயலராக ஹேமலதா மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளனா். இப்பிரிவில் ஒன்பது போ் இடம் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com