ஜாமியா மிலியா வன்முறை தொடா்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா்.எஸ். ரண்டாவா கூறியது: காவல்துறை மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்திய போதும், நாங்கள் குறைந்தளவு பலத்தையே பிரயோகித்தோம். ஜாமியா மிலியா வன்முறையின் போது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இந்த வன்முறைச் சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், மாணவா்கள் உயிரிழந்ததாக சமூக வலைத் தளங்களில் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறாா்கள். இந்த வதந்தி தொடா்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வதந்திகளை நம்பக் கூடாது. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றவியல் பிரிவினா் விசாரணை நடத்தவுள்ளனா் என்றாா் அவா்.