• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி

ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா': மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

By DIN  |   Published on : 13th February 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.
 இது தொடர்பாக மக்களவையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம். உதயக்குமார் முன்வைத்த கோரிக்கையில், "தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், அவரது முழு வெங்கல உருவச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான செலவை அதிமுக ஏற்கும். 
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மக்களவையில் மற்ற அதிமுக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைவிவரம் வருமாறு:
இடஒதுக்கீடு நீட்டிக்கப்படுமா?: திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால்: இந்தியாவில் சாதிப் பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான், சாதி அமைப்புமுறை ஆழமாக வேரூன்றியுள்ளது. சமூக மேம்பாடு நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. மேலும், மதத்தால் சாதி முடிவு செய்யப்படுவதில்லை என்பதும் உண்மையாகும். 
ஆனால், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக- சமத்துவ- இடஒதுக்கீடு- பயன்கள் மறுக்கப்படுகின்றன. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எனவே, மத்திய அரசு அனைத்து இதர எஸ்சி பட்டியலில் கிறிஸ்தவ எஸ்சி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்.
சுரங்கப்பாதை வேண்டும்: காஞ்சிபுரம் தொகுதிஅதிமுக உறுப்பினர் கே.மரகதம்:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி, திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு இடையே லெவல் கிராஸிங் (எண்45) பகுதியில் சுரங்கப்பாதைஆகியவை அமைக்க வேண்டும். குருவாயூர், திருச்செந்தூர், சோழன் , மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோலார்பேட்டையில் ரயில்கள் நின்று செல்லுமா?: கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார்: மங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னை , காட்பாடி, மொரப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கி
ன்றன.
ஆனால், ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து சென்னை, மங்களூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகின்றனர். இதனால், அந்த இரண்டு ரயில்களும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மருத்துவ மேற்படிப்பு விவகாரம்: மதுரை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருந்துப் பிரிவில் மருத்துவப் பட்ட மேற்படிப்பை தொடர்வதற்கு இந்திய மருத்துவக் குழுவிடம் அனுமதி கிடைக்காததால் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
சிதம்பரத்தில் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும்: சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி பேசுகையில், "சிதம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம் - திருநெல்வேலி அந்தோதயா எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- புவனேஸ்வர் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்