கடந்த 2014-16 காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சைபர் குற்றங்களின்

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 6,100க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின.
இதுதொடர்பாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், "தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, 2016இல் 2,522 சைபர் குற்ற வழக்குகளும், 2015இல் 2,384 சைபர் குற்ற வழக்குகளும் பதிவாகியிருந்தன. 2014ஆம் ஆண்டில், 1,286 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தன. 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் எத்தனை சைபர் குற்ற வழக்குகள் பதிவானது என்பது குறித்த தகவல் இல்லை. 2014முதல் 2016ஆம் ஆண்டு வரை மொத்தம் 6,192 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com