ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் திவ்ய ஜோதி தத்தாவை அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களை திறக்க அனுமதி பெறுவதற்காக திவ்ய ஜோதி தத்தாவுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வழங்கிய 2 பேரையும் கைது செய்தோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.