கார் மோதி இளைஞர் பலி

தில்லியின் விண்ட்சார் பகுதியில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

தில்லியின் விண்ட்சார் பகுதியில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீரஜ் (36) என்ற அந்த இளைஞர், ஞாயிற்றுக்கிழமை இந்தியா கேட் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தீரஜ் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீரஜை மீட்டு, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநரை அடையாளம் காண்பதற்காக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, தீரஜின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர் என்றார் அந்த அதிகாரி.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com