தில்லி புறநகர் வடக்கு மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் மீது கலால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் தில்லி புறநகர் வடக்கு மாவட்டத்தில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் அதிரடி மதுவிலக்கு சோதனை நடத்தப்பட்டது.
இருசக்கர வாகனங்கள், மார்க்கெட் பகுதிகள், இருள்சூழ்ந்த இடங்கள், பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டது. அதில் பொது இடங்களில் மது அருந்தியதாக மொத்தம் 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.