அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சாலை விபத்தில் இந்திய ஓட்டுநர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஹைதரபாதைச் சேர்ந்த சையது வாஸீம் அலி என்பவர் ஃபிரெமன்ட் நகரில் வசித்து வந்தார்.
இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை செலா ஹென்ரிக்ஸ் என்ற பயணியுடன் சான் பிரான்சிஸ்கோவின் பேவியூ மாவட்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று சிக்னலில் நிற்காமல் வந்ததால், வாஸீம் அலியின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் அவரும், செலா ஹென்ரிக்ஸும் உயிரிழந்தனர்.
பென்ஸ் காரில் இருந்த பயணிகள் 2 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பென்ஸ் காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.