காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளுக்கு முக்கியத்துவம்: ஷீலா தீட்சித் வலியுறுத்தல்

தில்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கட்சியின்

தில்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கட்சியின் மக்களவைத் தேர்தல் விளம்பரக் குழுவிடம் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான விளம்பரக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் ஷீலா தீட்சித் பேசுகையில், " நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற விளம்பரக் குழு முக்கியப் பங்கு ஆற்ற வேண்டும். இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட, மண்டல காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். கட்சியின் கொடியையும், விளம்பரங்களும் ஆங்காங்கே வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். 
குறிப்பாக, தில்லியில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளுக்கு தேர்தல் விளம்பரத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சாதனைகள் அனைத்தும் பிரசுரங்கள் வடிவில் அச்சடிக்கப்பட்டு வீடுதோறும் விநியோகிக்க வேண்டும். அதேவேளையில், 5 ஆண்டுகால பாஜகவின் ஆட்சி, 4 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியின் தோல்விகள் குறித்தும் விளக்க வேண்டும். 
ஆம் ஆத்மி கட்சி அரசியல் லாபங்களுக்காக மக்களின் வரிப் பணத்தை நாள்தோறும் நாளேடுகளில் விளம்பரம் மூலம் செலவிட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகாலத்தில் சாதனைகளை ஏதும் அக்கட்சி செய்யவில்லை என்பதால் விளம்பரங்களை பெருமளவில் செய்து வருகிறது என்றார் அவர்.
இக்கூட்டத்தில், தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராஜேஷ் லிலோத்யா, விளம்பரக்குழுவின் தலைவர் சுமேஷ் சோகீன், செய்தித் தொடர்பாளர்கள் ரமாகாந்த் கோசுவாமி, ஜீதேந்தர் கொச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com