யமுனையில் மூழ்கிய 3 பேர் சாவு: ஒருவர் மீட்பு

தில்லியில் யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தில்லியில் யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: யமுனை ஆற்றின் வாஜிரபாத் பகுதியில் உள்ள சூர்யா காட் படித்துறைப் பகுதியில் நீரில் நான்கு இளைஞர்கள் மூழ்கியதாக தீயணைப்புத் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் துர்கா சங்கர் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட மற்ற மூவரும் அருணா ஆஸஃப் அலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில் மூவரும் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் ஆயுஷ் குமார் (15), விகாஷ் (18), ராம் கிஷண் (18) ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்கள் நால்வரும் எப்படி மூழ்கினர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com