ஜிஎஸ்டி வருவாய் ராகுலின் பேச்சை பொய்யாக்கிவிட்டது: சிஏஐடி

ஜிஎஸ்டி வருவாய் ராகுலின் பேச்சை பொய்யாக்கி விட்டது என அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் ராகுலின் பேச்சை பொய்யாக்கி விட்டது என அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாலர் பிரவீண் கண்டெல்வால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டியை காங்கிரஸ் தலைவர் "கப்பர் சிங் வரி' என விமர்சித்து வருகிறார். ஆனால், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டது முதல் இதுவரையில் ஏப்ரலில்தான் அதிக அளவு வரி வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி  முறையின் கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும்  அதிகரித்துள்ளது.  இது "கப்பர் சிங் வரி' என கூறி வந்த ராகுல் காந்தியின் சிந்தனையையும் பொய்யாக்கியுள்ளது. ஜிஎஸ்டி முறையால் வணிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். புதிய அரசு அமைந்தவுடன் வணிகர்கள் எதிர்கொண்டு வரும் மற்ற பிரச்னைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com