தலித்துகளுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால்

தில்லியில்  வாழும் தலித் மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது என்று முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 


தில்லியில்  வாழும் தலித் மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது என்று முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் தனது சுட்டுரையில், "தில்லியில் உள்ள தலித் மக்கள் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதியில் போட்டியிட பஞ்சாபில் இருந்து ஒருவரை பாஜக இறக்கியுள்ளது. 
மேலும், தில்லியில் உள்ள 7 தொகுதிகளில் எந்தவொரு தொகுதியிலும் தலித் வேட்பாளர்களை பாஜக போட்டியிட வைக்கவில்லை. தில்லி தலித் மக்களில் ஒருவரைக் கூட வேட்பாளருக்குத் தகுதியானவராக பாஜக கருதவில்லை. தில்லி வாழ் தலித் மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது.  இந்த அவமானத்துக்காக வரும் தேர்தலில் பாஜகவுக்கு  அவர்கள் தகுந்த பதிலளிப்பர்' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com