மோதி நகர் கொலைச் சம்பவம்: முக்கிய குற்றவாளியின் மனைவி, மகள் கைது

மோதி நகரில், மகளை பாலியல் சீண்டல் செய்தவர்களை கண்டித்ததற்காக வணிகர் ஒருவர் கொல்லப்பட்ட

மோதி நகரில், மகளை பாலியல் சீண்டல் செய்தவர்களை கண்டித்ததற்காக வணிகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியின் மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 
மோதி நகரைச் சேர்ந்த 52 வயது வணிகரான துருவ்ராஜ் தியாகி கடந்த திங்கள்கிழமை தனது 27 வயது  மகளுடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் துருவ் தியாகியின் மகளை பாலியல் ரீதியாக பேசி சீண்டியுள்ளனர். 
இதையடுத்து, துருவ்ராஜ் தியாகி தனது 19 வயது மகனுடன் சென்று அந்த சகோதரர்கள் மூவரையும் தட்டிக் கேட்டார். அப்போது அந்த சகோதரர்களும், அவர்களது தந்தையும் சேர்ந்து துருவர்ராஜையும், அவரது மகனையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. 
இதில், துருவ்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகன், 3 நாள்களுக்குப் பிறகு அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 
முன்னதாக, இச்சம்பவம் குறித்து மோதி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து சீண்டலில் ஈடுபட்ட சகோதரர்கள் மூவரையும், அவர்களின் தந்தையையும் கைது செய்தனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சகோதரர்களின் தாயார் மற்றும் அவர்களது சகோதரி ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக மேற்கு தில்லி காவல்துறை துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com