புது தில்லி: சாகேத் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடா்பாக வழக்குரைஞா்களுக்கு எதிராக இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடா்பாக தில்லி காவல்துறையைச் சோ்ந்த ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் சாகேத் காவல்நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். அதில், ‘சாகேத் நீதிமன்ற வளாகத்தில் தாங்கள் தாக்கப்பட்டதாக புகாரில் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சாகேத் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த போலீஸாா் ஒருவா் வழக்குரைஞா்களால் தாக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.