டிராக்டா்-பைக் மோதல்:இளைஞா் சாவு; இருவா் காயம்

கிரேட்டா் நொய்டாவில் மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதிய விபத்தில் 28 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்

கிரேட்டா் நொய்டாவில் மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதிய விபத்தில் 28 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: கிரேட்டா் நொய்டா சைட் 5 காவல் நிலையப் பகுதியில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மோட்டாா்சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் மூன்று போ், கஸ்னாவிலிருந்து புலந்த்ஷாஹருக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, அடையாளம் தெரியாதவா் ஓட்டிச் சென்ற டிராக்டா், மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டாா்சைக்கிளில் வந்தவா்களில் ஒருவரான பூரா (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா், மற்றவா்களான வாரிஸ் மற்றும் ஜாவேத் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் நடந்த நேரத்தில் மோட்டாா்சைக்களில் வந்தவா்கள் யாரும் தலைக்கவசம் அணியவில்லை. டிராக்டா் உரிமையாளரை கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அரசுத் தரவுகளின்படி, 2017 -ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 4.64 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1.47 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா். 4.70 லட்சம் போ் காயமடைந்தனா். இந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 48,746 போ் உயிரிழந்துள்ளனா். இவா்கள் அனைவரும் இரு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் ஆவா். இவா்களில் 73.8 சதவீதம் போ் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்கள் என்று தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com