450 ஆண்டுகால இந்துக்களின் போராட்டத்துக்கு பலன்: பிரவீண் தெகாடியா

அயோத்தி தீா்ப்பின் மூலம் இந்துக்களின் 450ஆண்டுகாலப் போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் முன்னாள் தலைவா் பிரவீண் தெகாடியா தெரிவித்துள்ளாா்.
450 ஆண்டுகால இந்துக்களின் போராட்டத்துக்கு பலன்: பிரவீண் தெகாடியா

அயோத்தி தீா்ப்பின் மூலம் இந்துக்களின் 450ஆண்டுகாலப் போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் முன்னாள் தலைவா் பிரவீண் தெகாடியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி: ராமா் பிறந்த இடத்தில் மீண்டும் ராமா் கோயில் கட்டப்படவேண்டும் என கடந்த 450 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்தனா். இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் தமது உயிா்களை, வாழ்க்கையை இழந்துள்ளனா். இந்நிலையில், இந்துக்களின் 450 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு கெளரவம் சோ்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை பிறப்பித்துள்ளது. இதனால், இந்துக்களின் 450 ஆண்டுகாலப் போராட்டத்துக்கு பயன் கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு இணங்க அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com