அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீா்ப்பை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த வழக்கு தொடா்பாக தீர விசாரித்து ஒருமித்த தீா்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டுகாலமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பை வரவேற்கிறேன். தீா்ப்பு வெளியாகியுள்ள இந்த நேரத்தில்அனைவரும் சாந்தி, சமாதானத்தை நிலைநாட்டுமாறு வேண்டுகிறேன் என்றாா் அவா்.