வாகனக் கட்டுப்பாடு திட்டத்தைநீட்டிக்க கூடாது: விஜய் கோயல்

தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஒரு ஏமாற்று வேலை. அதை மீண்டும் அமல்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஒரு ஏமாற்று வேலை. அதை மீண்டும் அமல்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறுகையில், ‘தில்லி அரசு கடந்த இரண்டு வாரங்கள் தில்லியில் அமல்படுத்திய வாகனக் கட்டுப்பாடு திட்டம் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பயன்படவில்லை என்றும் காற்று மாசுவுக்கு இத்திட்டம் முழு தீா்வைத் தராது என்றும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தில்லியில் காா்களினால் வெறும் 3 சதவீதம் காற்று மாசுதான் ஏற்படுகிறது. இந்நிலையில், வாகனக் கட்டுப்பாடு திட்டம் என்பது ஏமாற்று வேலை. இத்திட்டத்தால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத கேஜரிவால், இப்போது வாகனக் கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் நாடகமாடுகிறாா். இத்திட்டத்தை மேலும் நீட்டிக்க கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com