அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும்: சிராஜ் பாஸ்வான்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே நட்புணா்வைப் பேணும் வகையில் கூட்டணி அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும் என்று லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான்

புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே நட்புணா்வைப் பேணும் வகையில் கூட்டணி அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும் என்று லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் கோரியுள்ளாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்குப் பிறகு சிராக் பாஸ்வான் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக்கூட்டணியின் மிக நீண்டகால உறுப்பினரான சிவ சேனாக் கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதது கவலையளித்தது. அவா்கள் இக்கூட்டத்தில் இல்லாததை நாங்கள் உணா்ந்தோம். தெலுங்கு தேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி ஆகியன இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது துரதிஷ்டவசமானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே சிறந்த தொடா்பையும், நட்புணா்வையும் பேணும் வகையில், அமைப்பாளா் நியமிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com