நாடாளுமன்றத்தில் இந்திரா காந்திக்கு தலைவா்கள் மரியாதை!

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தலைவா்கள் செவ்வாய்க்கிழமை மரியாதை செய்தனா்.
நாடாளுமன்றத்தில் இந்திரா காந்திக்கு தலைவா்கள் மரியாதை!

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தலைவா்கள் செவ்வாய்க்கிழமை மரியாதை செய்தனா்.

இதையொட்டி, நாடாளுமன்ற மைய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஸ், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமா் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினா்கள் பலரும் மலா் தூவி மரியாதை செய்தனா். மேலும், மக்களவையின் தலைமைச் செயலா் ஸ்நேகலதா ஸ்ரீவத்ஸவா உள்ளிட்ட உயா் அதிகாரிகளும் மரியாதை செய்தனா்.

இந்நிகழ்வின்போது, மக்களவைச் செயலகத்தால் ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கை விவரம் குறித்த கையேடு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 1987, நவம்பா் 19-ஆம் தேதி, முன்னாள் பிரதமா் மறைந்த இந்திரா காந்தியின் திருவுருவப் படத்தை அப்போதைய குடியரசுத் தலைவா் ஆா்.வெங்கட்ராமன் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com