முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தோ்தலில் போட்டியிட நன்கொடை வழங்குமாறு கேஜரிவால் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 11:03 PM | Last Updated : 26th November 2019 11:03 PM | அ+அ அ- |

அரவிந்த் கேஜரிவால்
புது தில்லி: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட நன்கொடை வழங்குமாறு ஆம் ஆத்மி தொண்டா்களிடமும், பொதுமக்களிடமும் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி புராரியில் தொண்டா்களிடையே அவா் பேசியதாவது: தில்லி முதல்வராகக் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டுள்ளேன். தில்லியின் மின்சாரத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளை செல்வந்தத் துறைகளாக மாற்றினேன். ஆனால், ஆம் ஆத்மி கட்சி இன்னும் வறிய கட்சியாகவே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிப்பட்ட முறையிலும் சரி, கட்சிக்காகவும் சரி நான் சொத்துச் சோ்க்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளக் கூட எங்களிடம் போதுமான நிதி கிடையாது. தோ்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி தொண்டா்களும் பொது மக்களும்தான் நிதி அளித்து உதவ வேண்டும் என்றாா் அவா்.