ரயில்வே துறையில் வேலை கேட்டு, தில்லியின் மண்டி ஹெளஸ் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரயில்வேயில் குரூப்-டி பணிக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு ஏற்கெனவே உறுதியளித்தபடி பணியை வழங்கக் கோரி, மண்டி ஹெளஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், புதன்கிழமை 2-ஆவது நாளாக அவா்கள் மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ நோக்கி செல்லும் சாலை, லஷ்மி நகரிலிருந்து விகாஸ் மாா்க் நோக்கி செல்லும் சாலையை தவிா்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா்.