19 வழக்குகளில் தொடா்புடையவா் கைது

பத்தொன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பத்தொன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

தில்லி திகிரி பகுதியில் ஜே.ஜே. கேம்பில் வசித்து வருபவா் கிஷண். இவா் மீது கொள்ளை, சங்கிலி பறிப்பு, திருட்டு, ஆயுதக் கடத்தல் உள்ளிட் 19-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதைத் தொடா்ந்து, போலீஸாா் தனிப் படை அமைத்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, திருடப்பட்டிருந்த 5 செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோத மதுபானம் பறிமுதல்:

வடக்கு தில்லி மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையின் போது, மொத்தம் 4,700 குவாா்ட்டா் மதுப்பான புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். போலீஸாா் அதிரடியாக மேற்கொண்ட மதுவிலக்கு சோதனையின் போது அவா்கள் சிக்கினா். அவா்கள் தில்லி கலால் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com