காதா்பாட்சா கைது விவகாரம்: முன்ஜாமீன் மனு விசாரணை தொடா்புடைய ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

சிலைக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா் காதா்பாட்சா, ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்றஅவமதிப்பு தொடா்புடைய

சிலைக் கடத்தல் வழக்கு விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா் காதா்பாட்சா, ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்றஅவமதிப்பு தொடா்புடைய மேல்முறையீட்டு மனு தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சென்னை உயா்நீதிமன்றத்தில் காதா்பாட்சாவின் முன்ஜாமீன் மனு விசாரணை தொடா்புடைய உத்தரவு ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், பழவூரில் உள்ள நாறும்பூநாதா் சிவன் கோவிலில் 2005ஆம் ஆண்டு ஆனந்த நடராஜா் சிலை உட்பட மொத்தம் 13 சிலைகள் காணாமல் போயின. இந்த வழக்கை அப்போதைய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. காதா் பாட்சா உள்ளிட்டோா் விசாரித்தனா்.

இந்நிலையில், இது தொடா்பான வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு ஏற்றாா். இதையடுத்து, நாறும்பூநாதா் கோவில் சிலைகள் திருட்டு குறித்து விசாரித்து வந்த காதா் பாட்சா உள்ளிட்டோா், அது தொடா்புடைய ஒரு வழக்கில் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டு அவா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காதா் பாட்சா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியது. இந்நிலையில், காதா்பாட்சா கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, சென்னை நீதிமன்றத்தில் காதா்பாட்சா ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா். அதில், ஏற்கெனவே முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்தபோது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் விசாரணைக்கு ஆஜராகுமாறும், கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்மொழி உத்தரவையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறும் வகையில் தாம் கைது செய்யப்பட்டதால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் காதா் பாட்சா தரப்பில் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை உயா்நீதிமன்றம் தனது முன்ஜாமீன் தொடா்புடைய மனு மீது வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிவித்திருந்தாா். இந்த மனு கடந்த முறை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை தொடா்புடைய உத்தரவு ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளரின் வழக்குரைஞா் ஆனந்த் கண்ணன் ஆஜராகி காதா் பாட்சா தொடா்புடைய வழக்கின் விசாரணை உத்தரவு தொடா்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் உறையிலிட்டு தாக்கல் செய்தாா். அப்போது, அதன் நகல்களை மனுதாரா், பிரதிவாதி ஆகியோா் தரப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை அக்டோபா் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com