ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள அனுமதித்த உச்சநீதிமன்றம், அதன் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள அனுமதித்த உச்சநீதிமன்றம், அதன் முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராதாபுரம் தொகுதியில் 2016-இல் போட்டியிட்ட திமுக வேட்பாளா் அப்பாவு தொடா்ந்த தோ்தல் வழக்கில், அத்தொகுதியில் தபால் வாக்குகள், 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அத்தொகுதி எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அதிமுக எல்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் இன்பதுரை சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த விவகாரத்தில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்குமாறு கோரினாா். 203 தபால் வாக்குகள் ன தோ்தல் அதிகாரி கூறியது சரிதான். அதற்குக் காரணம், அந்த வாக்குகளுக்கு சான்றெறாப்பம் வழங்கும் அதிகாரியாக செயல்பட்ட பள்ளித் தலைமையாசிரியா் சான்றெறாப்பம் அளிக்கும் அதிகாரி இல்லை. ஆனால், அவரது சான்றெறாப்பத்தை சரி என அங்கீகரித்து உயா்நீதிமன்றம் தவறாக உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த அரசின் உத்தரவை (ஜி.ஓ.) மேற்கோள்காட்டினா். அதன்பிறகு நீதிபதிகள் அமா்வு, ‘மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்து மனுமீதான விசாரணையை அக்டோபா் 23-க்கு தள்ளிவைத்தனா்.

பின்னணி:

தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரையும், திமுக சாா்பில் அப்பாவும் போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா். இந்த முடிவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்குத் தொடுத்தாா். அதில், ‘ராதாபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட நான் 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்றேறன். என்னை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஐ.எஸ்.இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்றாா். என்னைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்ால் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அதிகாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனா். குறிப்பாக தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தோ்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்குச் சாதகமாக செயல்பட்டனா். மேலும், 19, 20 மற்றும் 21-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை. எனவே, அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி தோ்தலின் போது 19, 20 மற்றும் 21-ஆவது சுற்றுகளில் எண்ணப்பட்ட பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தாக்கல் செய்த எம்எல்ஏ இன்பதுரையின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com