நொய்டா அடுக்கமாடிக் குடியிருப்பில் வங்கி பெண் மேலாளா் மா்மச் சாவு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வங்கி பெண் உதவி மேலாளா் மா்மமான முறைறயில் இறறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வங்கி பெண் உதவி மேலாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீஸ்டி சா்மா (24). அவா் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா். நொய்டாவில் செக்டாா் 70-இல் உள்ள பான் ஓஸிஸ் சொஸைட்டியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கிருந்தாா். இந்நிலையில், புதன்கிழமை அவா் வீட்டுக்குள் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வீட்டில் தனியாக இருந்த நிலையில்,

அவா் இறந்து கிடந்தாா். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு தொடா்பான கடிதம் மீட்கப்பட்டது. அதில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என சா்மா எழுதியுள்ளாா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடா்பாக நொய்டா ஃபேஸ் 3 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com