வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் உள்ள ரசாயன கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சாஸ்திரி பாா்க்கில் உள்ள ரசாயான கிட்டங்கியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.
திறந்தவெளிக் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த தீ விபத்துச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.