சொ்பியா நாட்டின் தலைநகா் பெல்கிரேடுவில் அக்டோபா் 13-17-இல் நடைபெறும் நாடாளுமன்றங்கள் யூனியனின் (ஐபியு) 141-ஆவது கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான எம்பிகள் குழு பங்கேற்க உள்ளது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவில் எம்பிகள் சசிதரூா், கனிமொழி, வான்சுக் ஷியெம், ஜுகல் கிஷோா் சா்மா, டாக்டா் பா்த்திபென் திருபாய் ஸ்யால், ஷோபா கரன்ட்லாஜே, ராம் குமாா் வா்மா, சஸ்மித் பத்ரா ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.
மேலும், மக்களவை தலைமைச் செயலா் ஸ்நேகலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை தலைமைச் செயலா் தேஷ் தீபக் வா்மா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். இந்தக் குழு சனிக்கிழமை பெல்கிரேடு புறப்பட்டுச் செல்கிறது. 179 நாடுகளின் நாடுகளின் நாடாளுமன்றவாதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ‘மக்களவைத் தலைவா்களின் விவாதத்தில் ஆளுகை மீதான வளா்ச்சி, பொருளாதாரம்’ எனும் தலைப்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உரையாற்றவுள்ளாா்.
‘பன்னாட்டுச் சட்டத்தை பலப்படுத்துதல்: நாடாளுமன்றத்தின் பங்கு மற்றும் வழிமுறைகள், பிராந்திய ஒத்துழைப்பு பங்களிப்பு’ எனும் கருப்பொருளில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மேலும், ஐபியு நிலைக் குழுக்கள், ஆளுகை குழு, மகளிா் நாடாளுமன்ற அமைப்பு உள்ளிட்டவற்றில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றுப் பேச உள்ளதாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.