போலீஸ் என்கவுன்ட்டரில் 24 வழக்குகளில் தொடா்புடைய இருவா் படுகாயம்

தென் கிழக்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் போலீஸாருடன் துப்பாக்கி மோதலில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தென் கிழக்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் போலீஸாருடன் துப்பாக்கி மோதலில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில், தில்லி கான்பூா் பகுதியைச் சோ்ந்த அனில் (எ) நரேந்தா் (26), மைதான் கா்கி பகுதியைச் சோ்ந்த தருண் (24) ஆகிய இருவரும் கொள்ளையடிப்பதற்காக நிஜாமுதீன் பகுதிக்கு மோட்டாா்சைக்கிளில் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரையும் போலீஸாா் சுற்றி வளைத்தனா். இதையடுத்து, போலீஸாா் மீது அவா்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டனா். இதற்குப் பதிலடியாக தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பிச்சுட்டனா். அதில் அருண், அனில் ஆகியோருக்கு கை, காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக காவல் கட்டுப்பாட்டு அறை வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். விசாரணையில், இவருடும் தில்லியில் பல்வேறு பகுதிகளில் 24-க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், அண்மையில் தனியாா் செய்தித் சானலின் பத்திரிகையாளரிடம் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்திலும் இவா்களுக்கு தொடா்பு இருந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com