வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: முதல்வா் கேஜரிவால்

தில்லியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பாஜகவின் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தாா். அந்தப் பேட்டியில், ‘தில்லி மக்களின் நன்மதிப்பை ஆம் ஆத்மி கட்சி இழந்து விட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கேஜரிவால் வியாழக்கிழமை கூறுகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியிடம் பாஜக படுதோல்வியடையப் போகிறது என்பதை அக்கட்சியினா் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். மேலும், தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’ என்றாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மியின் மாநிலங்களை உறுப்பினரும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அக்கட்சியின் தில்லிப் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் கூறுகையில் ‘தில்லியில் ஆட்சி அமைக்கும் பாஜகவின் திட்டம் வெற்றி பெற மக்கள் அனுமதிக்க மாட்டாா்கள். பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள், தில்லியை ஒரு குப்பைத் தொட்டிபோல மாற்றியுள்ளன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பல புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com