ரூ.1.16 லட்சத்துடன் மாயமானவர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், பிரோஸாபாதில் இருந்து தாம் வேலை செய்த உரிமையாளரின் பணத்துடன் தலைமறைவானவரை

உத்தரப் பிரதேச மாநிலம், பிரோஸாபாதில் இருந்து தாம் வேலை செய்த உரிமையாளரின் பணத்துடன் தலைமறைவானவரை கைது செய்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: 
பிரோஸாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஜகர்த்தா ஹுசேன் (57). இவர் ஜாபு என்பவரிடம் வேலை செய்து வந்தார். ரேவரியில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக ஹுசேனிடம் ரூ.1.16 லட்சத்தை ஜாபு கொடுத்திருந்தார். ஆனால், பணத்தை செலுத்தாமல் ஹுசேன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, போலீஸில் ஜாபு புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பணத்துடன் தனது கிராமத்திற்கு ஹுசேன் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு விரைந்து சென்று ஹுசேனை கைது செய்தனர். அவரிடமிருந்து பணமும் மீட்கப்பட்டதாக அந்த காவல் உயரதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com