வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி மறுப்பு: என்எஸ்யுஐ குற்றச்சாட்டு

தெற்கு தில்லியில் உள்ள தயாள் சிங் கல்லூரியில் வாக்களிக்க, காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய தேசிய

தெற்கு தில்லியில் உள்ள தயாள் சிங் கல்லூரியில் வாக்களிக்க, காங்கிரஸ் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) இணைச் செயலாளர் அபிஷேக் சாப்ரானாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அபிஷேக் சாப்ரானாவை போலீஸார் கைது செய்தனர் என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், "கல்லூரிக்கு வெளியே அபிஷேக் வாக்குச் சேகரித்து கொண்டிருந்தார். இதற்கு அனுமதி கிடையாது. வாக்கு சேகரிக்க வேண்டாம் என்று கூறியபோது, அவர் போலீஸாரிடம் தவறாக நடந்து கொண்டார். ஆகையால் அவரை தடுப்பு காவலில் வைத்தோம்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com