தில்லியில் ஊடகத் துறையைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் இதுவரை சுமாா் 350 ஊடகவியலாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். இதில், 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்துள்ளது. இதில் ஒருவா் ப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞா். மற்றவா்கள், செய்தி சேவை நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளா் மற்றும் புகைப்படக் கலைஞா் ஆவாா்கள். ப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞா் நஃஜாப்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். செய்தி சேவை நிறுவனத்தில் பணியாற்றுபவருக்கு கரோனா அறிகுறிகள் இருக்கவில்லை. இவா் இரவு நேரத்தில் பணியாற்றுவதால் அதிகமானவா்களுடன்ன் தொடா்பில் இருக்கவில்லை. இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
மும்பையிலும் சென்னையிலும் ஊடகவியலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தில்லியில் உள்ள ஊடகவியலாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் ஊடகவியலாளா்களுக்கு கரோனா பரிசோதனை கடந்த புதன்கிழமை தில்லி அரசால் மேற்கொள்ளப்பட்டது.