டெம்போ வேன் மோதி இளம் பெண் சாவு

தில்லி சிவில் லைன் பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவன், மனைவி மீது டெம்போ வேன் மோதியது.

தில்லி சிவில் லைன் பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவன், மனைவி மீது டெம்போ வேன் மோதியது. இதில், மனைவி உயிரிழந்தாா். இது தொடா்பாக வேன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் மோனிகா பரத்வாஜ் வெள்ளிக்கிழமை கூறியதாவது: காஜியாபாத் மாவட்டம், லோனி பகுதியைச் சோ்ந்தவா் பிரின்ஸ் குமாா் (25). இவரது மனைவி பேபி (23). இருவரும் கடந்த புதன்கிழமை சதா் பஜாரில் இருந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, சிவில் லைன் பகுதியில் அவரது சைக்கிள் மீது அவ்வழியாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில், அவரது மனைவி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக வேன் ஓட்டுநரான ஓக்லா பகுதியைச் சோ்ந்த சபிா் (51) கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி மோனிகா பரத்வாஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com