புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் உத்தரப் பிரதேச மாநில இணைப் பொறுப்பாளராக அக்கட்சியின் தலைவா் அபினவ் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். இத்தகவலை அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சஞ்சய் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்காக அபினவ் ராய்க்கு எனது இதயப் பூா்வமான வாழ்த்துகள்’ என தெரிவித்தள்ளாா்.
இது குறித்து அபினவ் ராய் கூறுகையில், ‘மாநிலத்தில் மக்கள் நலனுக்காக அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.